ஞாயிறு, 10 பிப்ரவரி, 2013

தமிழ்ப்பெயர்கள்


தமிழில் டீக்கு "தேநீர்',
காபிக்கு "குளம்பி' என்று
பெரும்பாலோருக்குத் தெரியும்.
மற்ற சில முக்கியமான உணவு
பொருட்களின் தமிழ்ப்பெயர்கள் அறிவோம்!

சப்பாத்தி - கோந்தடை

புரோட்டா - புரியடை

நூடுல்ஸ் - குழைமா

கிச்சடி - காய்சோறு, காய்மா

கேக் - கட்டிகை, கடினி

சமோசா - கறிப்பொதி, முறுகி

பாயசம் - பாற்கன்னல்

சாம்பார் - பருப்பு குழம்பு, மென்குழம்பு

பஜ்ஜி - தோய்ச்சி, மாவேச்சி

பொறை - வறக்கை

கேசரி - செழும்பம், பழும்பம்

குருமா - கூட்டாளம்

ஐஸ்கிரீம் - பனிக்குழைவு

சோடா - காலகம்

ஜாங்கிரி - முறுக்கினி

ரோஸ்மில்க் - முளரிப்பால்

சட்னி - அரைப்பம், துவையல்

கூல்ட்ரிங்க்ஸ் - குளிர் குடிப்பு

பிஸ்கட் - ஈரட்டி, மாச்சில்

போண்டா - உழுந்தை

ஸர்பத் - நறுமட்டு

சோமாஸ் - பிறைமடி

பப்ஸ் - புடைச்சி

பன் - மெதுவன்

ரோஸ்டு - முறுவல்

லட்டு - கோளினி

புரூட் சாலட் - பழக்கூட்டு

செவ்வாய், 5 பிப்ரவரி, 2013

தமிழர் வரலாறு கி.மு 14 பில்லியன் முதல் - கி.மு. 1 வரை : பகுதி - III


கிமு. 850பின்
இப்போதைய இந்தியாவின் பொதுவான மொழி தமிழ்வடமொழி, (வடதமிழ்தென்தமிழ்என மொழிகள் உருவாயினவடபுலத்தில் பிராமி எனவும் தென்புலத்தில் தமிழி எனவும் பெயர்பெற்றனபிராமிக்கும்தமிழுக்கும் எழுத்திலக்கண ஒற்றுமை உண்டுவடமொழி பாகதமாகவும்தென்மொழி தமிழாகவும் பெயற்பெற்றன. (சமசுகிருதம் வடமொழி அல்லகாரணம் அது போதுமான வளர்ச்சி அடைந்திருக்கவில்லை.) தொல்காப்பியம்பிராகிருதப் பிரகாசா இலக்கண நூற்கள் எழுதப்பட்டனகடைச் சங்க காலத்தில் நற்றினைகுறுந்தொகைஅகநானூறுபுறநானூறுகலித்தொகைபதிற்றுப்பத்துபரிபாடல்பத்துபாட்டுஎட்டுத்தொகைபதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்திருமுருகாற்றுப்படைசிறுபாணாற்றுப்படைபெரும்பாணாற்றுப்படைபொருநராற்றுப்படைகூத்தராற்றுப்படைமருதக்காஞ்சிமுல்லைப்பட்டுகுறிஞ்சிப்பாட்டுபட்டினப்பாலைநெடுநல்வாடைமுதலிய நூல்கள் தோன்றினதிருக்குறள் தலையாய நூல்பின்னர் சங்க கால முடிவுக்குப் பின் சிலப்பதிகாரம்மணிமேகலைசீவகசிந்தாமணிவளையாபதிகுண்டலகேசி முதலிய ஐம்பெரும்காப்பியங்களும்முதுமொழிக்காஞ்சிகளவழி நாற்பதுகார்நாற்பதுநாலடியார் திரிகடுகம்நான்மணிக்கடிகைசிறுபஞ்ச மூலம்ஏலாதிஆசாரக்கோவைபழமொழி நானூறுஇன்னா நாற்பதுஇனியவை நாற்பதுமுத்தொள்ளாயிரம் முதலிய நூல்களும் தோன்றின.

கிமு. 776

கிரேக்கத்தில் (கிரிஸ்முதல் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி.


குழந்தைகள் குகையில் கண்டு எடுக்கப்பட்ட மண்டையோடுமென்டோனாஇத்தாலிபித்திக்காந்திரோப் பஸ் யின் மண்டையோடு. (தூபுவா 1891ல் கண்டு எடுத்ததுசீனாந்திரோப்பஸின் மண்டையோடு (மீட்டமைப்புகெராஸிமவ்)


கிமு. 750

பிராகிருத மொழி மக்கள் மொழியாக ஆரம்பித்தது.

கிமு. 700

சொரோஸ்டிரேணியிசம் பெர்சியாவில் சொரோஸ்டரால் துவக்கப்பட்டதுஇவருடைய மதப்புத்தகம் செண்டு அவெசுடா.

கிமு. 623- 543

கெளதம புத்தர் காலம்தற்போதைய உத்திரப்பிரதேசத்தில் பிறந்தார்.

கிமு. 600

லாவோ துசு காலம்துவோசிசம் சைனாவில் புழக்கம்எளிமைதன்னலமின்மை சீனர்கள் வாழ்வானது.

கிமு. 600

கோதடிபுத்தர் அறிந்த மொழிகளில் தமிழும் ஒன்றுகி.முநான்குஐந்துஆறாம்நூற்றாண்டுகளில் குறிப்பிடத்தக்க மன்னர்கள் இளைஞன் கரிகாற்சோழன்பெருஞ்சோற்று உதயஞ்சேரலாதன்பழந்தமிழ் இசைக்கருவிகள் வடநாடு முழுவதும் வழக்கில் இருந்தன. (தோற்கருவிகள்தமிழிலக்கணத்தைப் பின்பற்றி சமஸ்கிருதத்திலும் எழுத முயற்சி மேற்கொள்ளபட்டதுபுணர்ச்சி இலக்கணம் சமஸ்கிருதத்தில் திணிக்கப்பட்டுள்ளது.

கிமு. 599 - 527

மகாவீரர் காலம்ஜெயின மதம் தோற்றம் உயிர்த்துண்பம் தவிர்த்தல் இவரின் பெருங்கருத்து.

கிமு. 560

பித்தகோரசு கிரேகத்தில் (கீரிஸ்கணிதம்இசைக் கற்றுக் கொடுத்தக் காலம்மரக்கறி உண்ணல்யோகாசனம்ஓவியம் தமிழ் நாட்டில் கற்பிக்கப்பட்டன.

கிமு. 551-478

கன்பூசியஸ் காலம்சீனர்களின் கல்விக்கு அடிப்படையே இவருடைய சமுதாய கல்விமக்களின் வாழ்முறைமதம் யாவும்.

கிமு. 500

கரிகாற் சோழன் காலம்உலக மக்கள் தொகை 100 மில்லியன்இப்போதைய இந்திய மக்கள் தொகை 25 மில்லியன்.

கிமு. 478

இளவரசன் விசயா 700 துணையாளர்களுடன் இலங்கையில் சிங்கள அரசு ஏற்படுத்தல்.

கிமு. 450

ஏதேன்சில் சாக்கரடீஸ் புகழோடு இருந்த காலம்.

கிமு. 428 - 348

சாக்கரடீஸ் மாணவர் புளுட்டோவின் காலம்.

கிமு. 400

கிரேக்கத்தில் மருத்துவமேதை இப்போகிரட்டீசின் காலம்பனினி வடமொழி இலக்கணம் அமைத்தார்.

கிமு. 350 - 328

உதயஞ் சேரலாதன் காலம் (செங்குட்டுவன் நெடுஞ்சேரலாதன்)

கிமு. 328 - 270

மகன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் ஆரியரை வென்றவன் கிரேக்க யவனரை அடக்கியவன்)

கிமு. 326

அலெக்சாண்டர் சிந்துப் பிரதேசத்தின் மீது படையெடுப்புவெற்றி அமையவில்லை.

கிமு. 305

சந்திரகுப்த மெளரியரின் அட்சிக்காலம்கிரேக்க பேரரசு அமைத்த செலுக்கசை தோற்க்கடித்தவர்.

கிமு. 302

சந்திரகுப்தரின் அமைச்சர் கெளடில்யர் அர்த்தசாத்திரம் எழுதல்.

கிமு. 300

சீனர்கள் வார்த்த இரும்பு கண்டுபிடித்தல்.

கிமு. 300

கல்வெட்டுகளில் சோழபான்டியசத்தியபுத்திரசேர அரசுகள் இருந்தனகி.முஇரண்டாம் நூற்றாண்டு வரை தமிழ்பிராகிருதம் இரண்டும் எழுத்து மொழியாகவும் பேச்சு மொழியாகவும் விளங்கினபிராகிருதம் மக்களின் மொழிநாணயங்களின் ஒரு பக்கம் தமிழ்மறுபக்கம் பிராகிருதம் என அமைந்திருந்தன.

கி.மு. 273-232

மெளரிய பேரரசர் அசோகர் காலம்தமிழ்நாடு தவிர மற்றவை இவர் வசம் இருந்ததுகலிங்க போர் இவரை புத்த மதத்திற்கு மாற வைத்ததுஇவரது அசோக சக்கரம் இன்று இந்தியக் கொடியில் உள்ளது.

கி.மு. 270-245

சேரன் பல்யானை செல்கெழு குட்டுவன்சோழன் பெரும்பூண் சென்னிபாண்டியன் ஒல்லையூர் பூதப் பாண்டியன்ஆகியோரின் காலம்.

கி.மு. 251

புத்த மதம் பரப்ப அசோகர் தன் மகனை இலங்கைக்கு அனுப்பினார்

கி.மு. 245-220

சேரன் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் காலம்.

கி.மு. 221

புகழ் வாய்ந்த சைனாவில் 2600 கல் நீளமுள்ள பெரும் சுவர் கட்டப்பட்டது.

கி.மு. 220 - 200

கரிகாற்சோழனுக்கும் பெருஞ் சேரலாதனுக்கும் போர்.

கி.மு. 220-180

குடக்கோ நெடுஞ்சேரலாதன் ஆட்சிஉறையூர்ச் சோழன் தித்தன்ஆட்டணத்திஆதிமந்திஆகியோர் வாழ்ந்த காலம்.

கி.மு. 200

முனிவர் திருமூலர் காலம். 3047 சைவ ஆகமங்களின் தொகுப்பான திருமந்திரம் எழுதினார்.

கி.மு. 200

தமிழ்நாட்டில் பதஞ்சலி முனிவர் யோக சூத்திரங்கள் எழுதினார். 18 சித்தர்களில் ஒருவரான போகர் முனிவர் பழனி முருகன் கோவிலை ஏற்படுத்தினார்.

கி.மு. 125-87

ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் காலம்.

கி.மு. 87-62

செல்வக் கடுங்கோ வாழியாதன் ஆட்சிபாரிஒரிகாரிகிள்ளிநள்ளி முதலிய குறுநில மன்னர்கள் ஆட்சி

கி.மு. 62-42

யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை ஆட்சிசேரமான் மாரி வெண்கோ தொண்டியில் ஆட்சிஇக்காலத்தில் வாழ்ந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்மாங்குடி மருதனார் கல்லாடனார்.(கல்லாடம்)

கி.மு. 42-25

பெருஞ்சேரலிரும்பொறை ஆட்சிசேரமான் மாரிவென்கோ இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளிகானபெரெயில் கடந்த உக்கிரப்பெருவழுதி ஒற்றுமையாய் இருந்தார்கள்இவர்களை இன்றே போல்கநும்புணர்ச்சி என அவ்வை பாராட்டினார்மோசிக்கீரனார்பொன்முடியார் கொண்கானங்கிழான் நன்னன்கரும்பனூர்கிழன்நாஞ்சில் வள்ளுவன் குறிப்பிடத்தக்கவர்கள்.

கி.மு. 31

உலகப் பொது மறையாம் தமிழனின் நன்கொடையாம் திருக்குறளைத் தந்த திருவள்ளுவர் பிறந்த ஆண்டு.

கி.மு. 25-9

இளஞ்சேரல் இரும்பொறை ஆட்சிபாண்டியன் பழையன் மாறன்கோப்பெருஞ்சோழன்பிசிராந்தையார்பொத்தியார்புல்வற்றூர் ஏயிற்றியனார் ஆகியோரின் காலம்.

கி.மு. 9-1

கருவூர் ஏறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரல் இரும்பொறைபாண்டியன் கீரன் சாத்தன் வாழ்ந்த காலம்.

கி.மு. 4

ஏசுநாதர் கிருத்துவர் மதம் கண்டவர் பெத்தலயேமில் பிறந்தார்.

கி.பி. 1 - 20

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் ஆட்சிகோவூர் கிழார்தாமப்பல் கண்ணனார்ஐயூர் முடவனார்ஆவூர் முழங்கிழார்ஆலத்தூர் கிழார்மற்றோக்கத்து நப்பசலையார்இடைக்காடனார்ஆடுதுறை மாசத்தனார்வெள்ளைக்குடி நாகனார் வாழ்ந்த காலம்.

திங்கள், 4 பிப்ரவரி, 2013

தமிழர் வரலாறு கி.மு 14 பில்லியன் முதல் - கி.மு. 1 வரை : பகுதி - II

கி.மு - 3100 - 3000

ஆரியர்கள் சிந்து சமவெளி வழி நுழைந்தனர்துணி நெய்தல் ஐரோப்பா சிந்து சமவெளியில் ஆரம்பித்ததுதென்னிந்தியாவில் குதிரைகள் இருந்ததுசைவ ஆகமங்கள் முதல் தமிழ்ச் சங்க காலத்தில் பொறிக்கப்பட்டன.

கி.மு - 2600

எகிப்திய பிரமிடுகள் வேலை ஆரம்பம்.

கி.மு - 2387

இரண்டாம் கடல் கொந்தளிப்பால் கபாடபுரம் அழிந்ததுஈழம் பெருநிலப் பகுதியிலிருந்து பிரிந்தது.

கி.மு - 2000 - 1000

காந்தாரத்தில் இருந்த ஆரியர்களுடன் வடபுலத் தமிழ் மன்னர்களும் சிந்து வெளி தமிழர்களும் போர் புரிந்த காலம்கடற்பயணங்களில் புதியன கண்டுபிடித்த சேர இளவரசர்கள் ஈழத்தில் ஆண்டகாலம்கங்கைவெளி சிபி மரபினர் ஆட்சிசிந்து வெளி சம்பரன் ஆட்சி.

கி.மு - 1915

திருப்பரங்குன்றத்தில் மூன்றாம் தமிழ்ச் சங்கம் நடந்தது.

கி.மு. - 1900

வேத கால முடிவுசரசுவதி ஆறு வற்றியதினால் மக்கள் தொகை கங்கை ஆறு நோக்கி நகர்ந்தது.

கி.மு. 1500

முக்காலத்து பிராமி மொழி வழக்கத்தில் இருந்த துவாரக நகர் வெள்ளத்தில் மூழ்கியதுஇரும்பின் உபயோகம்கிராம்பு சேர நாட்டிலிருத்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

கி.மு. - 1450

உபநிசத்துக்களும் வேதங்களும் உண்டாக்கப்பட்டன.

கி.மு. - 1316

மகாபாரத கதை வசிஸ்டரால் அமைக்கப் பட்டது.


கிமு. 1250

மோசஸ் 600,000 யூதர்களை எகிப்திலிருந்து வெளியேற்றினார்.

கிமு . 1200

ஓமரின் இல்லயாய்டுஓடசி பாடல்கள் மேற்கோற்படி கிரேக்க துரோசன் சண்டை.

கிமு. 1000

உலக மக்கள் தொகை 50 மில்லியன்.

கிமு. 1000-600

வடக்கில் சிபி மரபினர்தெற்கில் திங்கள் மரபினர் ஆட்சி நிலவியது.

கிமு. 950

அரசன் சாலமன் வர்த்தகக் கப்பலில் யூதர்கள் இக்காலத்து கூறப்படும் இந்தியா வருகை.

கிமு. 950

வடமொழி முழு வளர்ச்சியடையாது பேச்சு மொழி உருவெடுத்தக் காலம்.

கிமு. 925

யூதர்களின் அரசன் தாவிது இப்போதைய இசுரேல்லெபனானை பேரரசாகக் கொண்டிருந்தான்.

கிமு. 900

இப்போதைய இந்தியாவில் இரும்பின் உபயோகம்.
                                                                                                                                தொடரும்.....

தமிழர் வரலாறு கி.மு 14 பில்லியன் முதல் - கி.மு. 1 வரை : பகுதி - I




கி.மு 14 பில்லியன்

பெரும் வெடியில் உலகம் தோன்றியது.

கி.மு 6 - 4 பில்லியன்

பூமியின் தோற்றம்.

கி.மு. 2.5 பில்லியன்

நிலத்தில் பாறைகள் தோன்றிய காலம். முதன் முதலில் தமிழ் நாட்டில் மனித இனம் தோன்றியது. தென் குமரிக்குத் தெற்கே இலெமூரியா கண்டத்தில் முதலில் மனித இனம் தோன்றியது.

கி.மு. 470000

இக்கால இந்தியாவின் தமிழ் நாடு, பஞ்சாப் ஆகிய இடங்களில் மனித இனம் சுற்றித் திரிந்தது.

கி.மு. 360000

முதன் முதலாக சைனாவில் யோமோ எரக்டசு நெருப்பை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

கி.மு. 300000

யோமோ மனிதர்கள் ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் சுற்றித் திரிந்தனர்.

கி.மு. 100000

நியாண்டெர்தல் மனிதன்

கிழக்கு ஆப்பிரிக்காவில் தற்கால மனிதனின் மூளை அளவு உள்ள மனிதர்கள் வாழ்ந்தனர்.

கி.மு. 75000

கடைசி பனிக்காலம.. உலக மக்கட் தொகை 1.7 மில்லியன்.

கி.மு. 50000

தமிழ்மொழியின் தோற்றம்.

கி.மு. 50000 - 35000

தமிழிலிருந்து சீன மொழிக் குடும்பம் பிரிவு.

கி.மு. 35000 - 20000

ஆஸ்திரேலிய, ஆப்பிரிக்க சிந்திய மொழிகள் தமிழிலிருந்து பிரிந்ந காலம்.

கி-மு. 20000 - 10000

ஒளியர் கிளைமொழிகள் தமிழிலிருந்து பிரிந்தகாலம் ( இந்தோ ஐரோப்பிய மொழிகள் )

கி-மு. 10527

முதல் தமிழ்ச்சங்கத்தை பாண்டிய மன்னன் காய்கினவழுதி தோற்றுவித்த காலம். 4449 புலவர்கள் கூடினர். முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை முதலிய நூல்கள் இயற்றப்பட்டன.

கி.மு. 10527 - 6100

பாண்டிய மன்னர்கள் காய்கினவழுதி வடிவம்பலம்ப நின்ற நெடியோன், முந்நீர்ப் விழவின் நெடியோன், நிலந்தரு திருவிற் பாண்டியன் செங்கோன், பாண்டியன் கடுங்கோன்.

கி.மு. 10000

கடைகி பனிக்காலம் முற்றுப்பெற்றது. உலக மக்சுள் தொகை 4 மில்லியன். குமரிக்கணடம் தமிழர் 100000.

கி.மு. 6087

கடல் கொந்தளிப்பில் குமரிக் கண்டம் மூழ்கியது.

கி.மு 6000 - 3000

கபாடபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டவன் பாண்டிய மன்னன் வெண்தேர் செழியன். இரண்டாம் தமிழ்ச்சங்கத்தை நிறுவினான். 3700 புலவர்கள் இருந்தனர். அகத்தியம், தொல்காப்பியம் முதலிய இலக்கண நூல்கள் எழுந்தன. பாண்டிய மன்னர்கள் செம்பியன் மந்தாதன், மனுச்சோழன், தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன் அதியஞ்சேரல், சோழன் வளிதொழிலாண்ட உரவோன், தென்பாலி நாடன் ராகன், பாண்டியன் வாரணன், ஒடக்கோன், முட்டதுத் திருமாறன் ஆண்டகாலம்.

கி.மு. 5000

உலக மக்கள் தொகை 5 மில்லியன். சிந்து சமவெளி நாகரிகம் தொடக்கம். முகஞ்சதாரோ, ஹரப்பா.

கி.மு. 4000

சிந்து சமவெளி மக்கட் தொகை 1 மில்லியன்.

கி.மு - 4000

கிருத்துவ உலக நாட்குறிப்பு ஆரம்பம். சுமேரியாவில் புதை பொருளாராய்ச்சி சிந்து சமவெளி வணிகப் பொருள் கண்டது.

கி.மு - 3200

சிந்து சமவெளியினர் 27 விண்மீன்கள் இடைத்தொடர்பு நோக்கி சூரிய, சந்திரனின் முழு மறை வடிவங்கள் நிலைபபாடு கண்டனர்.

கி.மு - 3113

அமெரிக்க- தமிழினத்தவராகிய மாயர்கள் தொடங்கிய மாயன் ஆண்டுக் கணக்கு ஆரம்பம்.

கி.மு - 3102

சிந்து சமவெளிக் தமிழர்களின் "கலியாண்டு" ஆண்டு தொடக்கம், சிந்து சமவெளியில் தமிழர்களின் நாகரிகம் தழைத் தொடங்கியது.


மண்டையோட்டு வடிவங்களின் வகைகள்

இடமிருந்து வலம்: நெடுமண்டை நீள்வட்ட வடிவம்; இரண்டு குட்டைமண்டை வடிவங்கள்- நீளுருண்டை வடிவமும் ஆப்பு வடிவமும்; நடுமண்டை ஐங்கோண வடிவம்.

தொடரும்.....

வெள்ளி, 1 பிப்ரவரி, 2013

ஆறு சிறு பொழுது


-->
தமிழர்கள் காலத்தை வகுத்த விதம் பிரம்மிப்பானது. தமிழர்கள் இயற்கையை ஆதாரமாகக் கொண்டு காலத்தைப் பிரித்தார்கள். ஒரு நாளைக்கூட ஆறு சிறு பொழுதுகளாக பிரித்து வைத்திருந்தார்கள்.

1. வைகறை
2. காலை
3. நண்பகல்
4. எற்பாடு
5. மாலை
6. யாமம்

என்று அவற்றை அழைத்தார்கள். அது மட்டுமல்ல, அந்த ஆறு சிறு பொழுதுகளின் தொகுப்பையும் அறுபது நாழிகைகளாகப் பகுத்துக் கணக்கிட்டார்கள். அதாவது ஒரு நாளில் ஆறு சிறுபொழுதுகள் உள்ளன.

அந்த ஆறு சிறு பொழுதுகள் கழிவதற்கு அறுபது நாழிகைகள் எடுக்கின்றன என்று தமிழர்கள் பண்டைக் காலத்தில் கணக்கிட்டார்கள். ஒரு நாழிகை என்பது தற்போதைய 24 நிமிடங்களைக் கொண்டதாகும்.

அதாவது பண்டைக் காலத் தமிழர்களது ஒரு நாட் பொழுதின் அறுபது நாழிகைகள் என்பன தற்போதைய கணக்கீடான 1440 நிமிடங்களோடு, அதாவது 24 மணிநேரத்தோடு அச்சாகப் பொருந்துகின்றன.

தமிழர்கள் ஒரு நாள் பொழுதை, தற்போதைய நவீன காலத்தையும் விட, அன்றே மிக நுட்பமாகக் கணித்து வைத்திருந்தார்கள் என்பதே உண்மையுமாகும்